உதகை, நவ.13- குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச் பெற்று வருகிறார். நீலகிரி மாவட்டம், பெங்கால் மட்டம் பகுதியை சார்ந்த ராஜா என்பவரின் மனைவி லட்சுமி (40). தோட்ட தொழிலா ளியான இவர் புதனன்று காலை பழகாடு மட்டம் என்ற இடத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக் கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கும்பலாக புகுந்துள்ளது. இதனை கண்ட தேயிலை பறிக்க வந்த பெண்கள் சத்தம் எழுப்பி காட்டெருமைகளை விரட்டி விட்டு, மீண்டும் தேயிலையை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென லட்சுமியை விரட்டி தாக்கி விட்டு ஓடியுள்ளது. இதில் படுகாயடைந்த லட்சுமியை அருகிலுள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து காந்தள் ஈ 1 காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இதற்கிடையே, குன்னூர் பிளாக் பிரிட்ஜ் தபால் நிலை யம் அருகே காட்டெருமை ஒன்று முட்டி தாக்கியதில் சைமன் (87) என்பவர் முதியவர் படுகாயமடைந்தார். இதனை யடுத்து அவர் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி புதனன்று சைமன் உயிரிழந்தார்.