சேலம், மார்ச் 13- சேலம் பெரியார் பல் கலைக்கழகப் பொருளியல் துறையின் சார்பில் வேளாண்மைக் கருத்த ரங்கம் வெள்ளியன்று துவங்கியது. சேலம் பெரியார் பல் கலைக்கழகப் பொருளியல் துறையில் ‘இன்றைய சூழலில் வேளாண்மை சத்திக்கும் இடர்பாடுகள் மற்றும் அதனை தீர்க்கும் வழி முறைகள்’ பற்றிய இரு நாள் தேசியக் கருத்தரங்கு மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வில் பொருளாதாரத் துறை தலைவர் க.ஜெயராமன் கருத்தரங்கிற்கு வந்தோரை வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல், இன்றையச் சூழலில் வேளாண்மை உற்பத்தி செய்வதிலுள்ள பல்வேறு இடர்பாடுகள் குறித்தும், அதனை களைவது குறித்தும் விளக்கிப் பேசி னார். மதுரை காமராஜ பல்கலைக்கழகப் பொருளியல் துறை முன்னாள் தலைவரும், சுற்றுச்சூழல் பொருளியலறிஞருமான பேராசிரியர் துளசிபிருந்தா சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசினார். நிறைவாக, ஆடி பவுண்டேசனின் தலைவரும் கருத்த ரங்கின் அமைப்பாளருமாகிய பேராசிரியர் ராஜம் நன்றி கூறினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் வணிக வியல் துறைத் தலைவர் இளங்கோவன், பொருளாதாரத் துறை இணைப் பேராசி ரியர்கள் அ.சுகிர்தாராணி, அ.சரவணதுரை, பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், கவிதா, சேலம் அரசுக் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர்கள், பெரியார் பல் கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாண வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இக்கருத்தரங்கில் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பொருளாதார ஆய்வறிஞர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்த ரங்கின் செயல்பாட்டினையும், கருத் தரங்கு முடிவினையும் மத்திய மற்றும் மாநில அரசின் பார்வைக்கு கொள்கை முடி வெடுக்க அனுப்பு உள்ளதாக கருத்தரங்கு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.