tamilnadu

img

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றுக!

வேலூர், ஜூலை 8- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் வேலூர் மாவட்ட 3ஆவது மாநாடு தோழர்கள் வி.இ. ஏகநாதீஸ்வரன் ஜோன்ஸ் பிர பாகரன் முகில் நினைவரங் கில் (வேலூர் சரோஜ் இல்  லம்) மாவட்டத் தலைவர் சி. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை மத்தியக்குழு உறுப்பினர் இ.மோகனா துவக்கி வைத்து  பேசினார். மாவட்ட துணைச் செய லாளர் செ.ஏகலைவன் அஞ்  சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாவட்ட துணைத்தலைவர் ப.சக்தி வேல் வரவேற்றார். செயலா ளர் வெங்கடேசன் வேலை  அறிக்கையையும், பொருளா ளர் சி.தங்கவேலு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழகம் முழுவதும் நடை பெறும் ஆணவக் கொலை களை தடுத்து நிறுத்த வேண்  டும், அதற்கான சிறப்பு சட் டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறை வேற்ற வேண்டும், சாதி மறுப்பு திருமணத்தை ஊக்கு விக்கும் வகையில் தமிழக அரசு வேலை வழங்க வேண்  டும், தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வாலாஜா  படவேட்டம்மன் கோவில் பிரச்சனையில் சுமுக தீர்வு  காண மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலக் குழு உறுப்பி னர் செல்வன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  தலைவராக எம்.பி.ராமச்  சந்திரன், செயலாளராக குபேந்திரன், பொருளாள ராக சி.ஞானசேகரன் உள் ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.