tamilnadu

img

சர்வதேச நிபுணர்கள் பங்கேற்ற அல்ட்ரா சவுண்ட் மாநாடு

சென்னை, ஜூன் 30- அல்ட்ரா சவுண்ட் கதிரியக்க சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு  சென்னை நந்தம்பாக்கம்  வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதனை தி இந்தியன் ரேடியாலஜிக்கல் அன்ட் இமேஜிங் அசோசியேஷன் (ஐ.ஆர்.ஐ.ஏ) நடத்தியது. இந்த மாநாட்டை இந்தியன் மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான டாக்டர் சாந்தனு சென் தொடங்கிவைத்தார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் உல்ரிக் எம் ஹாம்பர், ஐ.ஆர்.ஐ.ஏ தலைவர் டாக்டர் ஹேமந்த் பட்டேல், பொதுச் செயலாளர் டாக்டர் ராஜீவ் சிங், மருத்துவத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கதிரியக்கத்துறை யில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் குறித்து விவாதித்தனர்.  இந்த கருத்தரங்கில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ஜா, ஹாங்காங் சீன பல்கலைக் கழக நோயறிதல் துறையை சேர்ந்த பேராசிரி யர்கள், நிபுணர்கள்  சிறப்புரையாற்றினர். உலக அளவில் உள்ள எல்லா ரேடியாலஜி நிபுணர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த ஸோனோ உச்சி மாநாடு 2019ன் மிக முக்கியமான நோக்கமாக இருந்தது. இந்தத் துறையில் சமீபத்திய முன்னேற்றம் தொடர்பான தெளிவான பார்வையை நிபுணர்களுக்கு வழங்க இந்த மாநாடு  உதவியது.