tamilnadu

சென்னை ,திருவள்ளூர் முக்கிய செய்திகள்

ரூ.84 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம்

திருவள்ளூர், ஜூலை 13- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளாக வாடகை  கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.  தற்போது கும்மிடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகம்  அருகில் புதிதாக சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.  இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை கும்மிடிப்பூண்டி  வட்டத்தை சேர்ந்த 81 வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லது பல்வேறு பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இதுநாள் வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த அலுவலகத்திற்கென புதிய கட்டிடம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி கட்டப்பட்ட அரசு திட்டமிட்டு இந்த பணிக்காக ரூ. 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய கட்டிடத்திற்கான துவக்கப்பணிகள் நடந்தபோது கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட் பட்ட  பகுதியில் இந்த கட்டிடம் கட்டப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததால் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டுமான பணி கடந்த மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.  1400 சதுர அடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட உள்ளதாகவும், இந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். மேலும் இந்த பணிகளை பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்து வருகின்றனர். 

புதைவட மின் கம்பிகள் பணி: 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் 

சென்னை,ஜூலை 13- சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர்  சென்னை கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் மின்கம்பி களை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண் டுக்குள் அரசு செயல்படுத்துமா என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை மாநகரில் 6 ஆயிரத்து 532 கிலோ மீட்டர் அளவுக்கு உயர் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படவுள்ளதாகவும், 2 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகர் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இதற்கான  பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதேபோல, பல்லாவரம் பகுதியில் உயர் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 102 கிலொமீட்டர் அளவுக்கு மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.