tamilnadu

img

தமிழகத்தின் வெற்றிக்கு எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டமே காரணம்

கோவை, மதுரை தொகுதிகளில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் வெள்ளியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கோவை மாவட்ட செயலாளர் கார்த்திக், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மதுரை வடக்கு மாவட்டச்  செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர்.

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோருக்கு தலைவர்கள்  கே.பாலகிருஷ்ணன், 
டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, ஏ.பாக்கியம், பி.சுகந்தி, வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை, மே 24-தமிழகத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய. மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடியதால் தான் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்கூறினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, மக்களவைதொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.ஆர்.நடராஜன்,சு.வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னையில் மாநிலக் குழு அலுவலகத்தில் திங்களன்று (மே24) உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல மாநிலங்களில் மோடி அலை இருந்தது.ஆனால் தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பலை. அதற்குக் காரணம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலகட்ட போராட்டங்களை நடத்தியதுதான்.இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாலேயே எதிர்காலம் முழுவதும் பாஜக ஆட்சிதான் என்று பரப்பப்படும கருத்தை ஏற்க முடியாது. ஏனென்றால் 1971இல்காங்கிரஸ் 351 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது  பாஜகபெற்றுள்ளதை விட ஒரு இடம் கூடுதலாகவும், 1.5 விழுக்காடு வாக்குகள் கூடுதலாகவும் பெற்றிருந்தது. ஆனால் அடுத்த தேர்தலிலேயே படுதோல்வி அடைந்தது.மதவாத நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடும்போது மக்களிடையே தானாகவே எதிர்ப்பு எழும். இடதுசாரிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. இடதுசாரிகளின் தோல்வியைப் பரிசீலனை செய்வோம். மேற்கு வங்கத்தில் 5 முனைப்போட்டியாக மாறியதே இடதுசாரிகள் தோல்விக்குக் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் வெற்றி தற்காலிகமானது எனக் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, 37 இடங்களில் தோற்றது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசாமல், திமுக கூட்டணியின் வெற்றி குறித்துப் பேசக்கூடாது; அதிமுகவின் மோசமான நடவடிக்கை காரணமாகவே தமிழகத்தில் அக்கட்சி தோல்வியைசந்தித்துள்ளது என்று கோபால கிருஷ்ணன் பதிலளித்தார்.மேலும், நீட் தேர்வு கூடாது என்பதற்காக மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும். ஆனால் நீட்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தப் போவதாக அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் கூறியிருந்தன. அந்த கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், திமுக கோவை மாவட்டச் செயலாளர் கார்த்திக், முன்னாள் மேயர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.