tamilnadu

img

அரசாணை 318-ஐ செயல்படுத்தக் கோரி மார்ச் 14 சென்னையில் போராட்டம்

சென்னை, மார்ச் 6- அரசாணை 318-ஐ செயல்படுத்தக் கோரி யும், எச்.ராஜா மற்றும் மதவாத அமைப்பு களை கண்டித்தும் மார்ச் 14 ஆம் தேதி  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்  படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின்  மாநில  அமைப்பாளர் சாமி.நடராஜன் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழகம் முழுவதும் அனைத்து சமய  நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தரப் பகுதி மக்கள் வீடுகட்டி குடி யிருந்து வருகின்றனர். குத்தகை சாகுபடி செய்தும், சிறுகடை வைத்து வியாபாரம் செய்தும் வருகின்றனர்.  குறிப்பாக இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை,  மானாவாரி நிலங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிமனைகளும், 22 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சிறு கடைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்கள் 95 சதம் பேர் சாதாரண ஏழை இந்து மக்களே. இவர்களுக்கு தற்போது அறநிலை யத்துறை வாடகை, குத்தகையை பல மடங்கு  உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட வாட கையை ஒரே தவணையில் செலுத்தச் சொல்லி பயணாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. கட்டத தவறியவர்களை அறநிலைய சட்டப்பிரிவு 78,79ஐ  பயன்ப டுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் என வெளி யேற்றும் நடவடிக்கை எடுக்கிறது. 

இந்நிலையில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள், சாகுபடி செய்ப வர்களுக்கு இந்த இடங்களை நியாயமான விலையை தீர்மானித்து அதை தவணை முறையில் பயணாளிகளிடம் பெற்றுக் கொண்டு சொந்தமாக்க வேண்டுமென அர சுக்கு கோரிக்கை வைத்து போராடி வரு கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்தாண்டு  அக்டோபரில் அரசாணை 318-ஐ வெளி யிட்டது. அதில் தொடர்ந்து 5 ஆண்டுகள் கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழை களுக்கு பட்டா வழங்க உத்தர விட்டது. இந்த  உத்தரவை எதிர்த்து எச்.ராஜா உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் பேசி வருகின்றனர்.  தமிழக அரசின் உத்தரவை செயல்ப டுத்தக் கூடாது என உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை உத்த ரவு பெற்றுள்ளனர். வழக்கில் தமிழக அரசு  தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழகம் முழு வதும் உள்ள கோயில் நிலங்கள் 4 லட்சத்து  78 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் வெறும் 600 ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசு கையகப்ப டுத்தவுள்ளது. இந்த நிலங்களுக்கும் சந்தை  மதிப்பை விட 3 மடங்கு சேர்த்து விலை  கொடுத்து வாங்கி சுமார் 20 ஆயிரம் ஏழை களுக்கு வழங்கவுள்ளதாக தெரி வித்துள்ளது. 

இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக அரசுக்கு எதிராக போராட்  டம் நடத்துவோம் என மிரட்டும் வகையில்  பேசுகிறார். கோவில் இடத்தில் குடியிருக்  கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா  வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்ப தோடு, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளை தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, அரசாணை 318ஐ உடன் செயல்ப டுத்தக் கோரியும், எச்.ராஜா உள்ளிட்ட மத வாத அமைப்புகளை கண்டித்தும் வரும் 14 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்  தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.