tamilnadu

img

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டுமென சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில்,

அண்மைக்காலமாக, 'குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி', 'ஆற்று நீரில் குளிக்க சென்ற மாணவர்கள் மரணம்', 'சுற்றுலா சென்ற இடத்தில், நீரில் மூழ்கிய ஒரே குடும்பத்தாரை தேடுகிறோம்', 'பாலாற்றில் குளித்தவர்கள் பலி', 'காலைக்கடனுக்காக ஒதுங்கிய பெண் குளத்தில் மூழ்கினார்', 'கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் மரணம்' என்று பல செய்திகள் ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன.

நீர் நிலைகளில் நீர் இறைத்தும், குளித்தும் வாழ்ந்த காலம் மாறி, நகர்மயம் பெருகியுள்ளது. எனவே நீச்சல் உள்ளிட்ட பயிற்சிக்கான வாய்ப்புகளும் அருகிவிட்டன. நீச்சல் தெரியாதவர் ஒருவர் மூழ்கத் தொடங்கினால், அருகில் இருப்போர் உதவிக்கு ஓடுவதற்கு கூட வழியில்லாத நிலை உருவாகிறது.

எனவே, தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்பாராத மரணங்களை தடுப்பதுடன், உடல்நலமும், உறுதியும் மிக்க இளைய தலைமுறை உருவாவதற்கு இது வழிவகுக்கும்.என தெரிவித்துள்ளார்.