பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் “அன்புக் கரங்கள்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகள் 18 வயது வரை பள்ளிப்படிப்பை இடையறாது தொடரும் வகையில், மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், பள்ளிப் படிப்பு முடிந்த பின் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.