சென்னை,டிச. 19 சென்னையில் 72 வயதாகும் மூதாட்டிக்கு அவரது முழங்காலில் இருந்த குருத்தெலும்பு மூட்டு குறைபாடுகளுக்கு வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது. குருத்தெலும்பை மாற்றுப்பதியம் செய்வ தற்கான சாவித்துளை என்ற இந்த சிகிச்சையை சென்னையில் வெற்றிகர மாக மேற்கொள்ளப்பட்டி ருப்பது இதுவே முதன்முறை யாகும். அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் முதுநிலை மருத்துவரும், விபத்து காயம் மற்றும் முடக்கு நீக்கவியல் அறுவைசிகிச்சை நிபுணரு மான டாக்டர். நந்த குமார் சுந்தரம் தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சாதனையைச் செய்தது. மூதாட்டி படிக்கட்டில் ஏறும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததற்குப் பிறகு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். நடப்பதில் அதிக சிரமப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததற்குப் பிறகு குருத்தெலும்பில் விரி சல்கள் இருப்பது கண்டறி யப்பட்டது. குருத்தெலு ம்பும், அதற்கு கீழே உள்ள மூட்டின் எலும்பு கட்ட மைப்பும் சேதமடைந்திருந்த நிலையில் அதை சரி செய்ய ஏஏசிடி என்ற சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு ஏஏசிடி சிகிச்சை செய்முறையானது, சாவித்து வாரம் வழியாக ஆரோக்கிய மான குருத்தெலும்பு திசுக்களை மறுபதியம் செய்கிறது. இதன்மூலம் அறுவைசிகிச்சையிலிருந்து மீண்டு குணமடையும் கால அளவு குறைகிறது. இந்த புதிய உத்தியானது, பாரம்பரியமான ஆட்டோ லொகஸ் கோன்ட்ரோசைட் இம்ப்ளான்டேஷன்என்பதை விட சிறப்பானது என்று டாக்டர் நந்த குமார் சுந்தரம், கூறினார்.