சென்னை, செப். 9 - டீக்கடைகள் மீது நடைபெறும் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிக ளின் அத்துமீறலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டீக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 38 வது ஆண்டு விழா ஞாயிறன்று (செப்.8) தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில், சென்னையில் 24 மணி நேரமும் கடைகள் இயங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு மாறாக இரவு 11 மணிக்கே கடைகளை அடைக்குமாறு காவல் துறையினர் நிர்பந்திக்கிறது. மேலும், கடை உரிமையாளர்கள், ஊழியர்களை கைது செய்து 75வது பிரிவின் கீழ் அபராதம் வசூலிக்கின்ற னர். இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டது. டீக்கடை வாயிலில் கிடக்கும் சிகரெட் துண்டுகளை காரணம் காட்டி அபராதம் விதிப்பதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதனையும் அரசு தடுக்க வேண்டும் என்று விழாவில் வலியுறுத்தப்பட்டது. இந்த விழாவில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவிற்காக இருவருக்கு விழாவில் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் இ.சுந்தரம் வரவேற்றார். பொருளாளர் சி.கே.தாமோதரன் வரவு செலவு அறிக்கையையும், துணைச் செயலாளர் வி.பி.விஜயன் ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்த னர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிர மராஜா, சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் பேரா. ஆர். ராஜ்குமார், வழக்கறிஞர் பி. ஆனந்தன், சங்க துணைத் தலைவர்கள் எம்.பி. மணி, கே.டி.கே. அரவிந்தன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலைவராக டி. ஆனந்தன், செயலாளராக ஈ. சுந்த ரம், பொருளாளராக சி.கே. தாமோ தரன் ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.