சென்னை,ஜூலை 30 தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கே.ஆர்.அர்ஜூனன், வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல் (நான்கு பேரும் அதிமுக), டி. ராஜா (இந்திய கம்யூ னிஸ்ட்) ஆகிய 5 பேரின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.மேலும், திமுக உறுப்பினரான கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் சூழலில் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மனு தாக்கல் தொடக்கம்: தேர்தல் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 8 ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற 11-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு தேவைப்படும் பட்சத்தில் 18-ஆம் தேதி நடை பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவைச் செயலா ளர் கி.சீனிவாசனும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.