tamilnadu

img

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் எஸ்.எப்.ஐ மாநில மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்  அமைக்க வேண்டும்  எஸ்.எப்.ஐ மாநில மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 21 - புதுச்சேரி மாநிலத்தின் வரலாறுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகை யில் தனி கல்வி வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு வள்ளலார் சாலையில் உள்ள செல்வநாதன் வரவேற்பு இல்லத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ் மாநில செயலாளர் அரவிந்த்சாமி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க புதுச்சேரி மாநில செயலாளர் சஞ்சய் சேகரன் ஆகியோர்  வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் பிரவீன் வேலை அறிக்கை சமர்பித்தார். அகில இந்திய இணைச் செயலாளர் ஆதர்ஷ் எம்.சாஜி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். நிர்வாகிகள் வந்தனா, அகிலா, ஸ்டீபன் ராஜ், சூர்யா, பரிதா, சுகவாணன் உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.  தீர்மானங்கள் மாநாட்டில் அரசு பள்ளிகளை மூடு வதை கைவிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கை என்ற சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திணிப்பதை மாற்ற வேண்டும், புதுச்சேரி வரலாறுகளை உள்ளடக்கிய தனி கல்வி வாரியம் ஏற்படுத்த வேண்டும், அட்சய பாத்திரம் நிறு வனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து பழைய முறையில் மதிய உணவு வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள்  புதுச்சேரி மாநிலத் தலைவராக எம். ஸ்டீபன், செயலாளராக எஸ்.பிரவீன் குமார் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.