tamilnadu

img

மனு அளிக்கச்சென்ற மாணவர் சங்கத் தலைவர்களை தடுத்ததால் தர்ணா!

மனு அளிக்கச்சென்ற மாணவர்  சங்கத் தலைவர்களை தடுத்ததால் தர்ணா!

காஞ்சிபுரம், மே 28- மாணவர்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ய கோரி நிர்வாகத்திடம் மனு அளிக்கச் சென்ற இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை நுழை வாயில் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனமான ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறு வனம். இது இந்திய அரசின் இளைஞர் விவ காரம் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர வையின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்குப் பயிலக்கூடிய மாணவர்கள் ஜெய்பீம், மற்றும் சுதந்திர பாலஸ்தீனம் (Free Palastine) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அம்மாணவர்களைக் கல்வி நிறுவனத்திலிருந்து ஓராண்டுக் காலம் இடை நீக்கம்    செய்யப்பட்டு ள்ளதை ரத்து செய்து, சம்மந்தப்பட்ட மாண வர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவைக் கல்வி நிறுவன துணை பதி வாளரிடம் நேரில் அளிக்கச் சென்ற இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, மத்தியக்குழு உறுப்பி னர் சி.மிருதுளா, காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் ச.ஏங்கல்ஸ், மாவட்ட தலைவர் பி.சுபாஷ் ஆகி யோர் நுழைவாயிலிலேயே நிர்வாக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்தைத் தொடர்ந்து  திருப் பெரும்புதூர் டி.எஸ்.பி நேரில் வந்து மாணவர் சங்கத் தலைவர்களிடம் சமாதானம் செய்து  இணைப் பதிவாளரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பிறகு தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், கல்வி நிறுவன துணைப் பதிவாளர், மாணவர் சங்கம்  தலைவர்கள் கோ.அரவிந்த்சாமி, சி.மிருதுளா உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை ஈடுபட்ட னர். பாதிக்கப்பட்ட மாண வர்களுக்கு தங்களது தரப்பு நியாயத்தை விளக்க  அனுமதி அளிக்கப்பட வில்லை. இது இயற்கை நியதிகளுக்கு எதிரானது. மாணவர்கள் மீதான புகார்கள் மீது உறுதியான ஆதாரம் இல்லை எனவே மாணவர்களின் இடைநீக்கத்தை உடனடி யாக ரத்து செய்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டு மென  பல்வேறு பேச்சு வார்த்தையில் வலியுறுத்தப் பட்டதாக மாணவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.