சென்னையில் உள்ள 'அம்மா' உணவகங்களில் இன்றும் நாளையும் விலையின்றி உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாயன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள தால், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள 'அம்மா' உணவகங்களில் இன்றும் நாளையும் விலையின்றி உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.