tamilnadu

img

தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது! – அமைச்சர் நாசர்

புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.