tamilnadu

img

திருவொற்றியூரில் பல்வேறு வசதிகளுடன் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு

திருவொற்றியூரில் பல்வேறு வசதிகளுடன் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு

சென்னை, மே 28- சென்னை, திருவொற்றி யூரில் ரூ.272 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன் கிழமை திறந்துவைத்தார். திருவொற்றியூரில் நடை பெற்ற விழாவில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பய னாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகம் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரை மீன் பிடிப்பிற்கென பிரத்தியேக மாக கட்டப்பட்டதாகும். இத்துறைமுகத்தில், தெற்கு மற்றும் வடக்கு அலை தடுப்புச் சுவர்கள், படகு அணையும் சுவர், படகு அணையும் தளம், மீன் ஏலக்கூடங்கள், மீன் வலைப்பின்னும் கூடம், நிர்வாகக் கட்டடம், மீனவர் தங்கும் அறை, வானொலித் தகவல் தொடர்பு மையம், உணவகம், வலை பாது காப்பு கூடம், சுகாதார வளாகம், மீனவர் ஓய்வு அறை, இழுவை அறை, படகு பழுது பார்க்கும் இடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, மழைநீர் வடிகால் கொண்ட சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “அலைகள்” திட்டம் மீன்பிடி சார்ந்த உப தொழில்களில் ஈடுபட்டு வரும் 50,000 மீனவ மக ளிர் பயனடையும் வகையில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டம் 2025 -26 ம் ஆண்டின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தினை முதல மைச்சர் தொடங்கி வைத்து, சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கடன் உதவித்தொகைகளை வழங்கினார். 2,290 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் மீனவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில், 16 கடலோர மீனவ கிராமத் திட்டத்தின் கீழ், மீனவ மக்களுக்கு இழுவை இயந்திரம், நட மாடும் மீன் உணவகம், குளிர்பதனப்பெட்டி, புதிய மீன் தீவன ஆலைகள், குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம், உயிர்காப்பு சட்டை, தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை, ஈமச் சடங்கு உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவித்தொகை; என மொத்தம் 2,290 பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 30 பயனாளிகளுக்கு முதல மைச்சர் நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, நாடாளு மன்ற உறுப்பினர் கலா நிதி வீராசாமி, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பி னர்கள் கே.பி. சங்கர், எஸ்.சுதர்சனம், ஆர்.டி. சேகர், தாயகம் கவி, துரை சந்திரசேகர், காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.கே.மோகன், ஜோசப் சாமு வேல், எபிநேசர், ஆர். மூர்த்தி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், மீனவர் நலத்துறை செயலாளர் என். சுப்பையன், மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த், திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தனியரசு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்