அம்பத்தூர், பிப். 15- அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் உள்ள நியூ செஞ்சரி பள்ளியின் 44ஆவது ஆண்டு விழா தாளாளர் டி.ரத்தினசபாபதி தலைமை யில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், நியூ செஞ்சுரி வெங்பேர் வாசைட்டியின் தலைவர் கே. ஹர்ஷவர்தன், பொருளாளர் எஸ்.சரவணன், மேலாளர் முத்துக்குமாரசாமி, ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி னர். வரும் கல்வியாண்டில் இருந்து தாய், தந்தை மட்டுமே உள்ள குழந்தைக்கு மாதாந்திர கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்த னர். பள்ளியின் முதல்வர் பி.புவனேஸ்வரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். முன்ன தாக நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.