tamilnadu

கிராமப்புற சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக

புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, மார்ச் 6- என்.ஆர்.எச்.எம் ஊழியர்களின் கோரிக்கையை புதுச்சேரி அரசு நிறை வேற்ற முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி  பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங் கம் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்)  சமூ கத்தின் அடித்தட்டு மக்கள் மற்றும்  மலைவாழ் மக்களுக்கு மருத்துவ  சேவையை கொண்டு செல்வ தற்காக 2005 ஆம் ஆண்டில் ஏற்ப டுத்தப்பட்டது. புதுச்சேரி சுகாதாரத் துறையின் ஓர் அங்கமாக செயல் பட்டு வரும் இயக்கத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். அரசுப் பணி  நியமனத்திற்கு தேவையான தகுதி கள் மற்றும் திறமைகளைக் கொண்ட  மருத்துவ செவிலியர்கள், தாய் சேய் நல செவிலியர்கள், ஆலோசகர்கள், உதவியாளர்கள் போன்ற பணிகள் உருவாக்கப்பட்டன.

தொடக்கத்தில் தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைவாக வழங்கப்பட்டது. குறிப்பாக செவிலி யர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.8000 வரையும், ஆலோசகர்களுக்கு ரூ. 10,000 என்ற விகிதத்தில் மாத ஊதிய மாக வழங்கப்பட்டது. நிரந்தர ஊழி யர்கள் செய்யும் பணிக்கு இணை யாக பணியாற்றி வரும், இவர்களின் மாத ஊதியம் நிரந்தர ஊழியர்கள் பெரும் ஊதியத்தில், ஐந்தில் ஒரு பங்காகும். 15 ஆண்டுகளாக பணி செய்து வரும் செவிலியர் பெறுகின்ற மாத  ஊதியம் ரூ.15,000 மட்டுமே சுகா தாரத்துறையில் சேவை, மனப் பான்மை அடிப்படையில் செயலாற்  றும் ஊழியர்கள் மிகக் கொடுமை யாக சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. நியாயமான ஊதியம் பணிநிய மனம் போன்ற உரிமைகளை அளிக்க  வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றோம் கடந்த காலத்தில் ஊழியர்க ளோடு புதுச்சேரி அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவின் அடிப்படை யில் சுகாதாரத்துறை பணி நியம னத்தில் 33 விழுக்காடு நியமனம் வழங்  கப்படும் என்ற முடிவினை அரசு உட னடியாக அமலாக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் என்னிடம் தான் உள்ளது எனக் கூறும்  துணை நிலை ஆளுநர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் இதர சலுகைகளுக்கு ஆதரவு தெரி விக்கும் போது, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வரும் சுகாதார  ஊழியர்க ளின் நியாயத்தை உணராமல் வாய்மூடி இருப்பதன் நோக்கம் என்ன மத்திய அரசின் தனி யார்மயக் கொள்கைகளை புதுச்சேரி யில் அமலாக்க இசைவு தெரி வித்துள்ளதை நிரூபிக்கிறது.  எனவே புதுச்சேரி முதல்வர் இதில்  தலையிட்டு உடனடியாக  போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வருவ தோடு, அரசு ஏற்றுக் கொண்ட உத்தர வாதத்தை அமலாக்க வேண்டும் என  புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ராஜாங்கம் தெரி வித்திருக்கிறார்.