tamilnadu

img

ஊதிய உயர்வுகளுக்கு அரசாணை கோரி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

சென்னை, மே 27- உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசு  அறிவித்த ஊதிய உயர்வுகளுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தி புதனன்று (மே 27) தமிழகம் முழுவ தும் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அண்மையில் ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர்  ஏற்றும் ஊழியர்களுக்கு (ஓஎச்டி) 1400  ரூபாயும்,  தூய்மைப் பணியாளர்க ளுக்கு 3600 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், தூய்மைப் பணியாளர்க ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட் டால் உடனடியாக 2லட்சம் ரூபாய் கொடுக்கப்படும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு ஒரு  மாத ஊதியம் கூடுதலாக சிறப்பு  ஊதியமாக தரப்படும் என்றும் அறி வித்தது. இவற்றிற்கு அரசாணை வெளியிடப்பாமல் உள்ளது. எனவே, அரசு அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளுக்கு அர சாணை வெளியிடக்கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. படப்பையில் உள்ள  குன்றத்தூர் ஒன்றிய அலுவலக வாயி லில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் பி.ரமேஷ் தலைமை தாங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ண மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர சி. முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.