tamilnadu

கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

கிருஷ்ணகிரி,ஜன.30- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரியில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய  அரசு மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் பல்கலைக் கழக மானிய குழுவால் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழி பல்கலைகழகத்தின் துணை வேந்தர்  சுரேஷ், குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்கான ஆய்வுக் கூட்டம் ஜனவரி 24 ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்றது.  கல்லூரியில் கட்டிட அமைப்பு, பேராசிரியர்கள், ஆய்வுக்கூடங்கள், விடுதி கள் விளையாட்டுத் திடல், மாணவர்களின் சேர்க்கை - தேர்ச்சி விகிதங்கள்,தரம் குறித்து  மதிப்பிட்டு கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகா ரம் வழங்கினர். பெரியார் பல்கலைக் கழக  துணை வேந்தர் குழந்தைவேலின் தன் னாட்சிப் பிரதிநிதியான குமார தாஸ், நீலம் மிட்டல், காசியாபாத் முத்துச்செழியன், ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் நிறுவ னர் சந்திரசேகரன், செயலர் ராஜி, முதல்வர் குணசேகரன்,பிரபு, சுரேஷ், அருள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்.2 கையெழுத்து இயக்கம்: விழுப்புரத்தில் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

விழுப்புரம், ஜன.30- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வருகிற 2 ஆம்  தேதி முதல் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி  கட்சிகள் சார்பில் தொடர் கையெழுத்து இயக்கம் நடைபெறு கிறது. விழுப்புரத்தில் நடைபெறும் இந்த இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடை பெற்றது. திமுக மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி  தலைமை தாங்கி பேசுகையில்,“ மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடக்கும் கையொழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஒன்றியங்கள், ஊராட்சி கள் தோறும் கையெழுத்து இயக்கங்களை 8 நாட்கள் நடத்தப்  படும்.  அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாகச் சென்று தெரு முனை பிரச்சாரமும் செய்ய வேண்டும். இதற்கு அனைத்து கட்சியினரும் தீவிர முயற்சியெடுக்க வேண்டும்” என்றார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் முத்துக்குமரன், திமுக மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி, மாவட்ட துணைச் செயலாளர் ம.ஜெயச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆர்.பி.ரமேஷ், வீ.சீனிவாசகுமார், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, விசிக செய்தித் தொடர்பாளர் தமிழேந்தி, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் அமீர்அப்பாஸ், தமுமுக முஸ்தாக்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.