சென்னை, ஆக. 22 - மாநகராட்சி தொழிற் பயிற்சி மையத்தில் சேர செப்.3ம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் அறி வித்துள்ளார். சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்க ளுக்காக ராயப்பேட்டையில் மாநகராட்சி தொழிற்பயிற்சி மையம் செயல்படுகிறது. இதில் கணினி இயக்குபவர், குழாய் பொருத்துநர் (பிளம் பர்), பொருத்துநர் (பிட்டர்), மின் பணியாளர், எலக்ட்ரா னிக் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக் உள் ளிட்ட பாடப்பிரிவுகளில் 184 மாணவர்கள் சேர்க் கப்படுவார்கள். சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மாண வர்கள் சேர்க்கையில் முன்னு ரிமை அளிக்கப்படும். மீத முள்ள இடங்களில் பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கு எந்தவித கட்டண மும் இன்றி மாணவர்க ளுக்கு இலவச பயிற்சி அளிக் கப்படும். பயிற்சி காலத்தில், சீருடை, பஸ் பாஸ் இலவச மாக வழங்கப்படும். மாதந் தோறும் ரூ.500 உதவி தொகையும் வழங்கப்படும். மாணவர்கள் சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இருந்து படிவங்களை பதி விறக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் செப்.3ம் தேதிக்குள் chennai corporationiti@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் தொழிற் பயிற்சி மையத்திலும் இல வசமாக கிடைக்கும். மாண வர் சேர்க்கைக்கான கலந் தாய்வு செப்.7 அன்று நடை பெறும். இந்த பயிற்சியில் 14 முதல் 40 வயது ஆண்கள் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.