காஞ்சிபுரம், டிச. 6- காஞ்சிபுரம் சங்கரமடம் அருகிலுள்ள செங்கழுநீர் ஓடை வீதியில் காய்கறி சந்தை உள்ளது. ஐம்பதற்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இப்பகுதியில் கட்டப்பட்ட கழிவறை பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் உள்ளது ஆழ்துளைக்கிணறு போடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு, சிறிது காலம் செயல்பட்ட இந்த கழிவறை பராமரிப்பின்றி பழுது அடைந்தவுடன் வழக்கம்போல் நகராட்சியினர் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வா கத்திற்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை கழிப்பறையை சீர்செய்து தரவில்லை.கழிப்பறையின் கழிவுநீர் வெளியேற வழி யில்லாமல் இங்கேயே தேங்குவதால் கழிப்ப றையை பழுதுபார்க்க நகராட்சியினர் அக் கறை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இப்பகுதியில் புதைவடிகால் குழாய்கள் அடைப்பு உள்ளதால் கழிவுகள் அடிக்கடி தடைபட்டு இந்த சந்தையில் தேங்கி நிற்கிறது. இதனால் வியாபாரமும் கெடுகிறது. கழி வறையையும், அடிக்கடி தேங்கி நிற்கும் புதை வடிகால் அடைப்பையும் நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்.தூய்மை இந்தியா என்ற விளம்பர போர்டு மாட்டினால் மட்டும் போதாது. தூய்மையற்ற நிலையில் உள்ள இந்த கழி வறையையும் தூய்மையாக்க வேண்டும் என வியாபாரிகள் விரும்புகின்றனர். காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் மகேஸ்வரி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று கடை வைத்திருப்பவர்கள் எதிர்பார்க் கின்றனர்.