tamilnadu

img

இடுக்கி நிலச்சரிவு: தமிழர்களுக்கு உதவிட கேரள முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:
இடுக்கி நிலச்சரிவு பெருந்துயர் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தொலை பேசி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்க வேண்டுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நமது தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் வழங் கிடுமாறு கேரள முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டை அதிகரித்திடுமாறும் வலியுறுத்தினேன்” என கூறியுள்ளார்.