ப.முருகன்
தமிழ் நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஒன்றிய ஆட்சியாளர்களின் நேரடிப் பிரதிநிதியாக - பாஜககாரராகவே செயல்படுவது அறிந்ததே. அவர் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் போலவே அரசியல் செய்வதும் மாநில மக்கள் அறிந்ததே. நாட்டில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் போலச் செயல்படுவதும் அத்துமீறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் ஒரு போட்டி அரசாங்கமே நடத்துவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு நாளொரு நிகழ்ச்சி. பொழுதொரு பேச்சு என்று பிரச்சனை யைக் கொளுத்திப்போட்டுக் கொண்டி ருக்கிறார் ஆளுநர் ரவி. இலக்கியம், ஆன்மீகம், அரசியல் என பல வகையி லும் பிரச்சனையைக் கிளப்பிக் கொண்டிரு க்கிறார். அண்மையில் திருவள்ளுவரை முழுமையாக மீட்க வேண்டும் என்று பேசி யிருக்கிறார். அவர் பேசியதன் பொருள் என்ன? முழுமையாக மீட்க வேண்டும் என்றால், கொஞ்சம் கைப்பற்றி வைத்திருப் பார்கள் போல.அது எத்தனை அளவு? அவர்களுக்குத்தான். தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்ற அவர் என்ன இவர்களது வலையில் சிக்கும் ஒரு வகைப் பொருளா? அவர் பொருளதி காரம் படைத்தவர். என்பதை மறந்து விடு கிறார்கள். பாவம். தமிழக மக்கள் அவரை உலகப் பொது மறை தந்தவர் என்று போற்றுகிறார்கள். மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று சிறப்பித்திருக்கிறான். மற்றவர்கள் பலரும் அவரை தங்கள் தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப தங்கள் சிமிழுக்குள் அடைக்க முயற்சித்து அதுவும் முடியாமல் போய்விட்டது.
அவரை மதச்சார்பற்றவர் என்று குறியிடவும் நியாயமில்லை. அவர் சமண மதத்தைச் சார்ந்தவர். அவர் குறிப்பிடும் ஆதிபகவன் என்பது சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரைக் குறிப்பிடும் என்று கூறுகிறார் ஆய்வாளர் அருணன். ஆனால் அதே ஆதிபகவனை இந்து மதக் கடவுளாக குறிப்பிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அது ஏற்புடையதல்ல. என்பது ஆர்எஸ்எஸ் இந்துத்துவா - வைதீகக் கும்பலுக்கு நன்றாகவே தெரி யும். இருந்தும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற பித்து, வெறி அவர்களது கண்களை மறைக்கிறது. எதையாவது ஒன்றை வைத்து உள்ளே நுழைந்து நாற்காலியைப் பிடிக்க வேண்டும் எனும் பேராசை. அதனால் சில ஆண்டுகளுக்கு முன்னால் தருண் விஜய் என்பவர் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் சொந்தம் கொண்டாடினார். கங்கைக் கரையில் சிலை வைக்கப்போவதாகவும் கூறி அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி னார். இப்போது ஆளுநர் அந்த வேலை யில் இறங்கியுள்ளார்.அண்ணாமலைக்கு உதவியாக செயல்படுவதாக எண்ணிக் கொண்டு தனது பதவிக்கான வரம்பை மீறி அரசியல் பேசுகிறார். ஆர்எஸ்எஸ்- இந்துத்துவா அரசியல் செய்கிறார். ஆனால் அதற்கு திருவள்ளுவர் இவர்களுக்கு உதவ மாட்டார். ஆனாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஆளுக்கொரு வேலை என பகிர்ந்து கொண்டு ஆர்எஸ்எஸ்இட்ட கட்டளையை நிறைவேற்றத்துடிக்கிறார்கள். பாவம் அவர்களின் பருப்பு இங்கு வேகப் போவதில்லை. ஏனென்றால் இவர்களது இந்துத்துவா, வைதீக, சனாதன சமாச்சாரம் இங்கு எடுபடாது. வர்ணாசிரம தர்மம், நால் வருணம் என்று சாதி அடிப்படையில் அமைந்தது இவர்களின் இந்து மதம். ஆனால் திருவள்ளுவரோ பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் பேசுகிறார். அவர்களோ பிறப்பினால், சாதி யினால் உயர்வு தாழ்வு கற்பித்தவர்கள். ஆனால் இப்போது சனாதனம் என்றால் சமத்துவம் என்று காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள். சாதிநூறு சொல்லுவாய் போ போ என்றான் பாரதி.
நாமும் அதைத்தான் இவர்களுக்கு பதிலாய்த் தருவோம். திருவள்ளுவர் இந்து தான் என்று சாதிப் பார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். திருவள்ளு வரின் சமணமதம் அத்தகையது. சம ணத்திலோ புத்தமத்திலோ சாதிய ஏற்றத் தாழ்வு இல்லை. ஆனால் சமணமும் புத்தமும்கூட இந்து மதத்தின் கூறுதான் என்பார்கள். திருக்குறளை ஆன்மீக இலக் கியம் என்று சாதிக்கப் பார்க்கிறார்கள். அது அறம், பொருள் இன்பம் எனும் அடிப்படை யில் அமைந்த வாழ்வியல் நீதி நூல் என்பதை மறந்து விடுகிறார்கள் வசதியாக. தங்களுக்கு வேண்டுமென்றால் எத்த கைய பொய்களையும் புனை சுருட்டுகளை யும் அள்ளித்தெளிப்பது ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு கைவந்த கலை தானே. அந்தக் கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி மட்டும் விதிவிலக்கா என்ன? திருவள்ளுவர் சமத்துவத்தின் அடை யாளம். அவரை சனாதன கிரகணம் தீண்ட முயற்சிக்கலாம்; ஆனால் கைப்பற்ற முடி யாது. இந்துத்துவ கூண்டுக்குள் அடைக்க முடியாது. பாவம் ஆர்.என்.ரவி.