tamilnadu

img

ஊழியர் சந்திப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட சென்னை மாவட்டம் சார்பில் புதனன்று (ஜூலை 8) ஊழியர் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டு 500 ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்சனிக்ஆல்பம்30 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, வடசென்னை மாவட்டத் தலைவர் சுந்தராம்பாள், செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.