tamilnadu

img

127 நாடுகளுக்கு மருந்து விநியோகம்

சென்னை:
கோவிட் 19 தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்தினை 127 நாடுகளுக்கு விநியோகம் செய்ய இந்தியாவை சேர்ந்த ஹிட்டிரோ நிறுவனம் ஜிலீட் சயின்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

நமது நாட்டில் மிகக்குறைந்த விலையிலான ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள “ஹிட்டிரோ’’ உலகில் நோய்தடுப்பு மருந்துகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.ரெம்டிசிவிர் மருந்துகளை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்ய ஜிலீட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த மருந்தினை இந்தியா உள்பட 127 நாடுகளிலும் விநியோகம் செய்ய சம்மந்தப்பட்ட நாடுகளிடம்   அனுமதியை பெற்றுள்ளதாக  ஹிட்டிரோ குழும தலைவர் டாக்டர் பி. பார்த்தசாரதி ரெட்டி கூறியுள்ளார்.ரெம்டிசிவிர் மருந்து ஐதராபாத்தில்  உள்ள இந்த நிறுவனத்தின் மருந்து கலவை பிரிவில் தயாரிக்கப்படுகிறது.