சென்னையில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகத்திற்கு தடை!
சென்னை, மே 23- சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முக்கிய நீர் குழாயில் இணைப்பு வேலைகள் நடை பெற உள்ளதால், மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். சென்னை மண்டலம் 4-ல் தண்டை யார்பேட்டையில் தண்ணீர் சப்ளை இருக்காது. ராயபுரம் மண்டலத்தில் (மண்டலம் 5) புரசைவாக்கம், பெரியமேடு, எழும்பூர், சௌகார்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை ஆகிய இடங்களில் தண்ணீர் வராது. திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம் 6), அண்ணா நகர் மண்டலம் (மண்டலம் 8), தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம் 9) ஆகிய இடங்களில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லி வாக்கம், கெல்லிஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தண்ணீர் சப்ளை தடை படும். “குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு தண்ணீரை முன் கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுங் கள்” என்று மெட்ரோ வாட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. அவசர தேவைக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பெறலாம். அதற்கு மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். டேங்கர் லாரிகள் மற்றும் தெரு குழாய் கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும்.குழாய் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வரும் பகுதி களுக்கும் டேங்கர் லாரிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். இது தொடர்பாக மெட்ரோ வாட்டர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குழாய் இணைப்பு வேலையை மே 24 காலை 8 மணி முதல் மே 25 காலை 8 மணி வரை செய்கிறது. இதனால் தண்ணீர் சப்ளை பாதிக் கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.