tamilnadu

img

தோழர் விபிசி நினைவு ரத்ததான முகாம்

தோழர் விபிசி நினைவு ரத்ததான முகாம்

சென்னை, மே 11 - தொழிற்சங்கத் தலைவர் தோழர் வி.பி. சிந்தன் நினைவு ரத்ததான முகாம் ஞாயி றன்று (மே 11) கேரள சமாஜம் பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. சிஐடியு மத்தியசென்னை மாவட்டக்குழு வும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனையும் இணைந்து இந்த முகாமை நடத்தியது. முகாமை தொடங்கி வைத்து பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “விபிசி நினைவாக ஆண்டு தோறும் மாநிலம் முழுவதும் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. மே 8 அன்று விருதுநகரில் நடைபெற்ற முகாமில் ஒரு தோழர் 107வது முறையாக ரத்ததானம் செய்தார். மருத்துவ ரீதியாக 108 முறைக்கு மேல் தரக்கூடாது என்று மருத்துவர் அறி வுறுத்தினார். ஆனால், அவர் உடல் ஆரோக்கி யமாக இருக்கும் வரை ரத்தம் தருவேன் என்று  கூறினார். நமது அமைப்பு செய்யும் ரத்ததான இலக்கிற்கு அருகில் கூட ரசிகர் மன்றங்க ளால் வரமுடியவில்லை. தத்துவப்பிடிப் போடு, தியாகத்தின் வெளிப்பாடாக ரத்த தானம் செய்கிறோம். மனிதம் காக்கும் இந்த பணியை மேலும் அதிகப்படுத்துவோம்” என்றார். “பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் பாஜக வெறுப்பு பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டது. இருதரப்பும் தாக்குதல் நிறுத்திய போதும் ஆங்காங்கே தாக்குதல் நடக்கிறது. ஒன்றிய ஆட்சி யாளர்களின் வியூகம் உழைக்கும் மக்க ளுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்காது. தொழிலாளர் ஒற்றுமையை பாது காக்கும் பணியை செங்கொடி இயக்கம் தொடர்ந்து செய்யும்” என்றும் அவர் கூறி னார்.

கண் பரிசோதனை முகாம்

ரத்ததான முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த முகாமின் ஒருபகுதியாக எம்.என்.கண் மருத்துவமனை நடத்திய கண்  பரிசோதனை முகாமில் 125 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும், 25 பேர் சென்னை மருத்து வக் கல்லூரிக்கு உடல்தான உறுதிமொழி படி வத்தை வழங்கினர். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் எம்.வி. கிருஷ்ணன், பி.சுந்தரம் மற்றும் ஆர்.அருள் குமார் (சுமைப்பணி), எஸ்.கே.முருகேஷ் (சாலை போக்குவரத்து), ஜெ.பட்டாபி, பெ.சீனிவாசுலு (செங்கொடி), வி.சீனி வாசன் (மின்ஊழியர் மத்திய அமைப்பு), எம்.பழனி (மெட்ரோ வாட்டர்), ம.உதய குமார் (கட்டுமானம்), ராஜாராமன் (ஐசிஎப்), செங்கேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.