tamilnadu

செய்யூரில் பனை தொழிற்சாலை: சட்டமன்றத்தில் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 4-  காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. எனவே இப்பகுதி யில் பனை வெள்ளம், பனை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனஞ்சாறு இறக்கிட அனுமதிக்க வேண்டும் என்று  வியாழனன்று சட்ட மன்றகேள்வி நேரத்தில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த கதர் மற்றும் ஊரக தொழில்துறை  அமைச்சர்  பாஸ்கரன் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுள்ள பகுதியில் பனை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில் தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க பரீசீலனை செய்யப்படும் என்றார்.