tamilnadu

ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, ஜூன் 8- ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வடசென்னை - தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளை கண்டறியவும் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த சேவை வழங்கு வதற்காகவும் அமர் சேவா தொண்டு நிறுவன களப்பணியாளர்களைக் கொண்டு வட சென்னையில், ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் பிப்ரவரி 2025 முதல் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறும், மேலும் இந்த பணி முழுமையாக நடை பெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.