tamilnadu

அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் இடங்கள்: சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 27- அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் இடங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி  அரசை வலியுறுத்தியுள்ளது. கட்சியின் புதுச்  சேரி பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்  காடு இடஒதுக்கீடு இந்தாண்டு முதல் மத்திய  அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தும் வகையில் நாட்டில்  உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்தி லும் கூடுதலாக மருத்துவக் கல்வி இடங்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 50 இடங்கள் மருத்து வக் கல்வி பயிலும் வகையில் அனுமதிக்கப் பட்டிருக்க வேண்டும். புதுவை அரசு காலத் தோடு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மேற்படி கல்லூரியில் கூடுதல் மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பொதுப்பிரிவினர் பட்டியலில் தகுதியுள்ள பல மாணவர்களுக்கு மருத்துவக்  கல்வி இடங்கள் பெறும் வாய்ப்பு மறுக்கப்  பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு இனியும்  காலம் தாழ்த்தாமல், மருத்துவக் கல்வியில் கூடுதல் இடங்களை கேட்டு பெற வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்  சேரி பிரதேசக் குழு வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.