tamilnadu

திருமழிசை சந்தையில் அழுகும் 100 டன் தக்காளி

சென்னை, ஆக. 3 - கனமழை காரணமாக திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில்  மழைநீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால் 100 டன் அளவிலான தக்  காளி விற்பனையாகாமல் வாகனங்களிலேயே தேக்கி கிடக்கின்றன.  சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறன்று (ஆக.3) இரவு கனமழை  பெய்தது. இதனால் திருமழிசை தற்காலிக மொத்த காய்கறி சந்தையில்  100 டன் அளவிலான தக்காளி மழையின் காரணமாக விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. கனமழை காரணமாக காய்கறி சந்தை யில் வைத்து விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரி கள் தெரிவிக்கின்றனர்.