tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் 1.24 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை,அக்டோபர்.26- துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.24 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இலங்கை பயணி ஒருவர் துபாயிலிருந்து சென்னை கடத்தி வந்த தங்கத்தை விமான நிலையத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு இலங்கைக்குத் தப்ப முயன்றுள்ளார்.
அப்போது சோதனையிலிருந்த சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் வரவே கழிவறைக்குச் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் தங்கம் கடத்தி வரப்பட்ட பார்சல் கிடைத்துள்ளது. உடனே இலங்கைக்கு தப்ப முயன்ற பயணியை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.
அவரிடமிருந்து ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.24 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.