செங்கல்பட்டு, ஏப்.3- செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தழி ழக அரசு சானிடைசர் தயாரிக் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் எச்பிஎல் நிறுவனம் மூலம் மிகப் பெரிய அளவில் உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த நிறுவ னத்தில், கொரானா வைரசை தடுக் கும் சானிடசைர் 6 ஆயிரம் லிட்டர் தாயரிக்க கேரள அரசு எச்பிஎல் தலைமை நிர்வாகத்திற்கு பணி உத்தரவு வழங்கியுள்ளது. இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொரானா வைரசின் முதல் கட்ட ஆய்வு செய்ய பயன்படுத்தும் டிரான்ஸ்மிஷன் தயாரித்து வரு கின்றனர். இதனை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறுகையில், “திறந்த வேகத்தி லேயே மூடு விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதர் சங்கம் தொடர்ந்து பலகட்ட போராட்டங் களை நடத்தியது. பிரதமரின் கவ னத்திற்கு கொண்டு சென்றது. இதற்கிடையே, இந்நிறுவ னத்தின் தலைமை நிறுவனத் திற்கு கேரள மாநில அரசு வழங் கிய பணி உத்தரவால் ஆறு ஆயி ரம் லிட்டர் சானிட்டரி தயார் செய்து ஏப்ரல் 4ஆம் தேதி சனிக் கிழமை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். வேலை இழந்த தொழிலாளர்க ளுக்கு இதன்மூலம் மறு வாழ்வு வழங்கப்பட்டது” என்றார்.
உலகையே கொரோனா அச்சுறுத்தி வரும் சூழலில் அதற்கான முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ள தொண்டையில் உள்ள சளியினை எடுத்து ஆய்வ கத்திற்கு அனுப்பும் வைரஸ் டிரான்மிஷன் இங்கு தயா ரிக்கப்படுகிறது. ஆகவே இந்த முதல் கட்ட ஆய்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உலகத் தரத்தில் பல வைரஸ்களுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் கருவிகள் உள்ள இந்நிறுவனத்தை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கேரள அரசு போலவே சானி டைசர் தயாரிக்க தமிழக அரசும் பணி உத்தரவு வழங்க வேண்டும், சென்னைக்கு மிக அருகில் மக்கள் பணத்தில் 6 கோடியில் உரு வாக்கப்பட்டுள்ள இந்நிறுவ னத்தை தொடர்ந்து நடத்த மத்திய அரசு பணம் ஒதுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து எச்பிஎல் நிறு வனத்தின் தலைமை நிர்வாகி விஜயனிடம் கேட்டபோது,” எங்க ளது தலைமை நிறுவன்திடமி ருந்து சானிடைசர் தாயரிப்ப தற்கான உத்தரவு கிடைத்துள் ளது. அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. தமிழக அரசி டமிருந்து எந்த உத்தரவும் கிடைக்கவில்லை. கிடைத்தால் பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம். வைரஸ் ட்ரான் மிஷன் நோயாளிக ளிடம் இருந்து வைரஸ் சேம்பல் எடுத்து ஆய்வகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பும் கருவி தாயரிக்கும் முயற்சியல் ஈடுபட்டு வருகி றோம்” என்றார்.