tamilnadu

img

வங்கி கடன் வசூலை தள்ளி வைக்கக் கோரிக்கை

அரியலூர், ஜூன் 18- அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பாக ஆட்சியரின் அலுவலகத்தில் கோரிக்கை மனு வினை மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மீன்சுருட்டி ஒன்றிய செயலாளர் டி அம்பிகா, அரியலூர் ஒன்றிய தலைவர் மலர் ஆகியோர் கொடுத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வங்கிக் கடன் உள்பட அனைத்து கடனை ஆறு மாத காலத்திற்கு வசூல் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்டவை மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.