சென்னை, ஆக.14- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாலசுப்பிரமணியத்தின் நிலை வெள்ளிக்கிழமை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார்.