திருப்போரூர், ஆக. 5- திருப்போரூர் அரசு வட்ட மருத்துவ மனையை 24 மணி நேரமும் மருத்துவர்களு டன் செயல்பட நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி புதனன்று (ஆக.5) மருத்துவமனை முன்பு இந்திய வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அரசு வட்டம் மருத்துவமனை 2011 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில் திருப்போரூர், மடையத்தூர், சிறு தாவூர், தண்டலம், வெண்டு, தையூர், கண்ணா கப்பட்டு, நெம்மேலி, பட்டி புலம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி, பணி யில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவி லியர்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தரக் குறைவாகப் பேசுவதும், மருந்து மாத்தி ரைகள் இல்லை என்று கூறி தனியார் மருந்துக் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் அரசு வட்ட மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவ மனையாகச் செயல்பட வைக்க வேண்டும், நோயாளிகளுக்கு மாத்திரை மருந்துகள் கொடுக்காமல் தரக்குறைவாகப் பேசும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், செயலாளர் க.புருஷோத்தமன், ஷேர் ஓட்டுநர் சங்க நிர்வாகி விமல் உள்ளிட்டோர் பேசினர்.