குடியிருப்புக்குள் உயர்மின் கோபுரம்: கோட்டாட்சியரிடம் புகார்
செங்கல்பட்டு, நவ.13- வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் வல்லம் ஊராட்சி நாவிதர் நகர்ப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் மின்சார வாரியத்தால் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. இப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு முன்னறி விப்பு ஏதும் கொடுக்காமல் பணியை மேற்கொண்டுள்ள தாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் எந்த நேரத்திலும் ஏதும் நடக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வருவாய் வடிகால் பகுதியில் மின்கோபுரம் அமைப்பதால் மழைக்காலத்தில், மழை நீரால் அரிக்கப்பட்டு உயர்மின் கோபுரம் பாதித்தால் அப்பகுதி யில் உள்ள மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே உயர்மின் கோபுரத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
ஏரியில் மூழ்கி தாய் மகள் பலி
திருவள்ளூர், நவ.13- திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா. அவரது மகள் குமாரி. இவர்கள் இருவரும் மாடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ள னர். அப்போது மாட்டை குளிக்க வைப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளார் குமாரி. அப்போது அவர் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்குவதை அறிந்த தாய் சுகுணா அவரை மீட்பதற்காக அவரும் ஏரியில் இறங்கியுள்ளார். இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர் மாடு மேய்க்க சென்ற தாயும், சகோதரியும் வீட்டுற்கு வராததை அடுத்து, மகன் கமலக்கண்ணன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதனன்று (நவ.13) காலை ஏரியில் இரண்டு பேரின் சடலங்கள் மிதப்பதாக கமலக்கண்ணனுக்கு தகவல் இடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது தாய் சுகுணாவும், சகோதரி குமாரியும் என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலமானார்
சென்னை, நவ. 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினரும், இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தன் பகுதிச் செயலாளருமான கே.மணிகண்டனின் தந்தை குப்புசாமி செவ்வாயன்று (நவ.12) காலமானார். அவருக்கு வயது 47. அண்ணாநகர் கிழக்கு மண்டபம் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், ச.லெனின், பகுதிச் செயலாளர் பெ.சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னாரது உடல் புதனன்று (நவ.13) வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.