மாமல்லபுரத்தில் முதல்வர் இன்று ஆய்வு
செங்கல்பட்டு, அக்.1- பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இரு நாடுகளுடனான ஒப்பந்தகள் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக, மாமல்ல புரத்துக்கு வருகைத்தர உள்ளனர். மேலும், இரு தலைவர்களும் பல்லவ மன்னர்களின் கலைச் சின்ன ங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், உள்ளிட்ட வைகளை நேரில் பார்வை யிட உள்ளனர். இதனால், கோவளம், மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தலை மைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடபாடி பழனி சாமி புதனன்று (அக்.2) மாமல்லபுரத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
கல்லூரியிலேயே தேர்வு நடத்த வேண்டும் கலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை
திருவள்ளூர், அக்.1- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் நடைபெரும் தேர்வுகள் அனைத்தும் கல்லூரியிலேயே நடைபெற்று வந்தது. கடந்த முறை நடைபெற்ற தேர்வில் சில மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இக்கல்லூரி மாணவர்க ளுக்கு சென்னை உட்பட பல இடங்களில் தேர்வு நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும் திருத்தணி கல்லூரியிலேயே நடத்த வேண்டும், முதலாமாண்டு மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து மாணவர்கள் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.