வேலூர், ஜூலை 21- காஞ்சிபுரம் மாவட்டம் டாஸ்மாக் கடையில் பணி யாற்றி வந்த விற்பனை யாளர் ராஜா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயி ரிழந்தார். இதனால்வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள 199 கடைகளில் பணியாற்றும் மேற்பார்வை யாளர்கள், விற்பனையா ளர்கள் கடைகளை திறக்கா மல் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகங்கள் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட னர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு முகக்கவசம், சானி டைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண் டும், அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் 50 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட் டம், முறையாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், உயிரிழந்த விற்பனையாளர் ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் டாஸ்மாக் உதவி மேலாளர் பேச்சுவார்த்தை யில் நடத்தி, உங்கள் கோரிக் கைகளை டாஸ்மாக் நிர்வா கத்திற்கு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.