tamilnadu

img

சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தீண்டாமை கதவை அகற்ற கோரிக்கை

வாலாஜா, மே 26-வேலூர் மாவட்டம் வாலாஜா நகரில் அம்பேத்கர் நகரில்  சிறீபடவேட்டம்மன் ஆலயத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கதவு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.இதனை அகற்றவேண்டும் என்று ராணிப்பேட்டை  சார்- ஆட்சியர் மற்றும்உட்கோட்ட  நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டனர். சட்டவிரோதமான தீண்டாமை சுவர் மற்றும் கதவை  தாமதமின்றி அகற்ற  வாலாஜா வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்  நேரடியாகவும், கடிதம் மூலமாக நினைவூட்டிய பின்னரும் சுமார் 20 நாட்களுக்கு மேலாக  வட்டாட்சியர்  நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.எனவே, இச் செயலை வன்மையாக கண்டித்துள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி,மாவட்ட ஆட்சியருக்கும், ராணிப்பேட்டை சார் ஆட்சியருக்கும் இந்து ஆதிதிராவிட மக்களின் சட்ட உரிமைகளை மீட்க கோரி மனு அளித்துள்ளது. “ராணிப்பேட்டை சார்ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர்நீதிமன்றத்தின் மே 2 ந் தேதி உத்தரவை நிறைவேற்றி இந்து திராவிட மக்களின் சட்ட உரிமைகளை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்வதாக," அந்த மனுவில் கே.சாமுவேல்ராஜ் கூறியுள்ளார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டச் செயலாளர் தா.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் செல்வம், விவசாயிகள் சங்க வேலூர் மாவட்டச் செயலாளர் பி.சக்திவேல், விதொச மாவட்டத் தலைவர் பி.ரகுபதி, அம்பேத்கர் நகர் நாகராஜ்,ஊர் நாட்டாமை மணி,  சத்தியமூர்த்தி, வினோத் மற்றும்  கிராம  இளைஞர்கள் பலர் குழுவினருடன் உள்ளிட்டோர் மனு அளிக்கும் போது உடனிருந்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் முரளியிடம்.   (பொது) இந்த மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட அவர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனேஅனுப்புவதாக கூறினார்.