tamilnadu

img

விண்ணமங்கலம் ஏரியை தூர் வாரும் பணியில் முறைகேடு: சிபிஎம் குற்றச்சாட்டு

வேலூர், அக். 1- விண்ணமங்கலம் ஏரியை தூர்வா ரும் பணியில் முறைகேடு நடை பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. விண்ணமங்கலம் ஏரியை தூர்  வாரும் பணியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசா ரணை நடத்த வேண்டும்,  வெள்ளகல் அணை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீரால் பாதிக்கப்  பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு  வழங்க வேண்டும், விவசாயி களுக்கு வங்கிகளில்  மீண்டும் நகைக்  கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆம்பூர் தாலுக்கா கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுக்கா செயலாளர் வ.அருள் சீனிவாசன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமி நாதன், பி.சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழகம் முழுவதும் உள்ள ஏரி களில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு  தம்பட்டம் அடிக்கிறது. பின்னர் இதுகுறித்து வ.அருள் சீனிவாசன் கூறியதாவது: விண்ணமங்கலம் ஏரி 354 ஏக்கர் பரபள்ளவு கொண்டது. இதன் மூலம்  சுமார் 150 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று  வருகிறது. தமிழக அரசு குடிமரா மத்து பணிக்கு என 33 லட்ச ரூபாய்  ஒதுக்கீடு செய்தது. ஆனால் தூர் வாரு கிறோம் என ஜேசிபி எந்திரத்தின் மூலம் ஒரு சில இடங்களில் மட்டும் சீரமைத்து விட்டு, முழுமையாக ஏரியை தூர் வாரவில்லை. கரையில்  உள்ள முட்செடிகளைக் கூட அகற்ற வில்லை. ஏரி மதகுகள் உடைந்து கிடக்கின்றன.  ஒதுக்கப்பட்ட நிதியை முழுமை யாக ஏரியை சீரமைக்க பயன்படுத்தா மல்,  ஆளுங்கட்சியினர் முறைகேடு  செய்துள்ளனர். இதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடந்தை யாக இருந்துள்ளனர். எனவே முறை கேடு குறித்து அரசு உரிய விசா ரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதி காரிகள், ஆளுங்கட்சியினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் ஏரி நிறைந்தது. தண்ணீரை, மீன் பிடிக்க குத்தகை எடுத்த ஆளுங்கட்சி பிரமுகருக்கு ஆதரவாக பொதுப் பணித்துறை அதி காரிகள் தண்ணீரை முழுமையாக வடித்து மீன் பிடிக்க ஒத்துழைப்பு அளித்தனர். இதனால், விவசாயிகள் தண்ணீர் இன்றி பயிர் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.