உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருந்து தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெனிசுலாவில் கொரோனாவிற்கு புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். ஒரு தாவரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட உர்சோலிக் அசிப் என்ற பொருளை பயன்படுத்தி கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது . கடந்த 6 மாதங்களில் நடந்த சோதனையில் இந்த ஆரோக்கியமான மூலக்கூறுகளில் நச்சு விளைவுகள் இல்லாமல் கோவிட்19 தொற்று 100 சதவிகிதம் நிவாரணம் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது என மதுரோ தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி பாப்பிலோமா வைரஸ், ஹெப்படைடிஸ் சி, மற்றும் எபோலா தடுப்பில் முக்கிய பங்கு வகித்த டிஆர்10 மூலக்கூறு கொரோனா தொற்றை அழிப்பதிலும் முக்கியபங்கு வகிக்கிறது.
மேலும் வரும் நாட்களில் வெனிசுலா அறிவியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் தருவோம் என்று தெரிவித்துள்ளார்.