வாஷிங்டன்
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 210 நாடுகளைப் பதம் பார்த்து வருகிறது. தற்போது வட அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் மையம் கொண்டு இந்த கொரோனா வைரஸ் அங்கு அசூர வேகத்தில் பரவி வருகிறது.
இதில் வட அமெரிக்காவில் உள்ள முக்கிய நாடான அமெரிக்கா கடும் சேதாரத்தைச் சந்தித்துத் திணறி வருகிறது. அங்கு இதுவரை 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில்,38,820 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை என அனைத்திலும் அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளதால் அமெரிக்கா அரசு என்ன நடவடிக்கை எடுப்பது என விழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.