நாடகக் கலைஞர்கள் தங்களது உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
********************
தமிழகத்தில் கொரோனா பாதிப்புஇல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
********************
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள்முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் நிரம்பியுள்ளன.
********************
விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
********************
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோபோன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மாநில அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
********************
நாட்டின் 15-வது நிதி குழு, 2020-21 ஆம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தநிதி குழுவின் தலைவர் என்.கே. சிங்மற்றும் உறுப்பினர்கள் நிதி பகிர்வு இறுதி அறிக்கையின் நகலை செவ்வாயன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த நிதி பகிர்வு அறிக்கை நாடாளுமன்ற அவையில் நிதியமைச்சரால் முன்வைக்கப்படும்.
********************
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாஜகவிலிருந்து விலகினார். இவரது விலகல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
********************
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கதேர்தல் முடிவு நவம்பர் 22 ஆம்தேதிக்கு பதில் 23 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் வாக்குஎண்ணிக்கை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் அறிவித்துள்ளார்.
********************
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.14 - க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
********************
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு வரும் 19 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க,ரயில்வே வாரியத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
********************
நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. இதுகுறித்து சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவிக்கக் கோரி பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.