tamilnadu

img

பணப்புழக்கமில்லை; ஜவுளிக்கடைகளில் கடந்தாண்டை விட விற்பனை குறைந்தது

சென்னை, அக். 28- பணப்புழக்கம் இல்லாத கார ணத்தால் ஜவுளிக்கடைகளில் இந்தாண்டு தீபாவளி விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், ராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகளில் வழக்கத்தை விட  குறைவாகவே கூட்டம் காணப்  பட்டதாக அவர்கள் கூறினர். தீபா ளிக்கு முந்தைய நாள் மட்டுமே கூட்டம் இருந்ததாகவும் இந்தாண்டு கடந்தாண்டு விற்ப னையை விட குறைவாகவே  ஜவுளிகள் விற்பனையானதாக வும் அவர்கள் கூறினர். நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம், விலை வாசி உயர்வு  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைக ளால் மக்களிடம் வாங்கும்சக்தி குறைந்து விட்டதாகவும் அவர் கள் கூறினர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொள் முதல் செய்து விற்பதாலும் சில்  லறை வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறினர். ஆன்லைன் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்  களை விற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உற்பத்தி நிறு வனங்கள் தங்களுக்கு ஒரு விலையிலும் ஆன்லைன் நிறு வனங்களுக்கு அதை விட குறை வான விலையிலும் பொருட்  களை விற்க தடைவிதிக்கவேண் டும் என்றும் அவர்கள் வலி யுறுத்தினர்.

தங்க நகை விற்பனையும் வீழ்ச்சி

தீபாவளி என்றாலே புத் தாடை, பட்டாசோடு, தங்க விற்  பனையும் முன்னிலை வகிக்கும். ஆனால், பல ஆண்டு கால பழக்க  வழக்கமெல்லாம் மாறிப்போயி ருக்கிறது இந்த ஆண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் தங்கத் தேவையில் கால் பகுதி இந்தியா வின் தேவையாக இருந்தது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 24 விழுக்காடு குறைந்துள்ளது. அதேபோல தீபாவளி மற்றும் அதனை ஒட்டிய  நாட்களிலும் தங்கம் விற்பனை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை கடும்  உயர்வைக் கண்ட நிலையிலேயே  இந்த மாதமும் நீடிக்கும் நிலை யில், கடந்த 6 ஆண்டுகளில் இல்  லாத அளவுக்கு நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் மக்களிடம் பணப் புழக்கமும் கடுமையாக பாதிக்  கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உலகிலேயே தங்கம் அதிகம் வாங்கும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம்  இடத்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. ஒரு பக்கம் பணப்புழக்கம் குறைவு மற்றும் தங்கம் விலை உயர்வும் இணைந்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதாகவே பார்க்க முடிகிறது.  தற்போது, தங்கத்தை விடவும், ஸ்மார்ட் ஃபோன், டிவி போன்றவற்றை வாங்க நகரப் பகுதிகளைப் போலவே ஊரக மற்றும் கிராம மக்களும் நினைப்பதால், தங்கம் வாங்குவது அல்லது தங்கத்தின் நாட்டம் குறைந்திருக்கலாம் என்  றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.