tamilnadu

விருதுநகர், திருவில்லிபுத்தூர் முக்கிய செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 வது நாளாக தடை நீட்டிப்பு
விருதுநகர், நவ.27- சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3வது நாளாக வனத்துறை தடை விதித்தனர். இதனால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 24ம் தேதியில் இருந்து பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திங்க ளன்று நள்ளிரவு நேரத்தில் கன மழை பெய்தது. இதை யடுத்து சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை , சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.  எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி 3வது நாளாக கோயி லுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் கார்த்திகை அமாவாசை தினமான செவ்வாயன்று கோயி லுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
திருவில்லிபுத்தூர்,நவ.27- திருத்தங்கல்லில் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் மாரீஸ்வரன். இவருக்கும் அவரது மனைவி மகா லெட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து, க மகாலெட்சுமி தனது சகோதரர் முருகேசனு டன் சேர்ந்து மாரீஸ்வரனை கடந்த 2012 நவ., 17 அன்று கொலை செய்தனர்.  இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, திருவில்லிபுத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் குற்றவாளி முருகேசனுக்கு 6 ஆயிரமும், மகாலெட்சுமிக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.