tamilnadu

விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு

விழுப்புரம், ஜூன் 13- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே  பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவரை  பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தோற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம்  28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சனிக்கிழமை  அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் உயிரி ழந்தோர்  எண்ணிக்கை 3இல் இருந்து 4ஆக உயர்ந்துள்ளது. இறந்  தவர் உடல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் பாதுகாப்பாக விழுப்புரம் கே.கே.ரோட்டில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.