வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 5,000 ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று சங்கு வளையல்கள், சுடுமண் கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்காலச் செங்கற்கள், சிகை அலங்காரத்துடன்கூடிய பாவையின் தலைப் பகுதி, சுடுமண் கூம்பு வடிவ அகல் விளக்கு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.